15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. பிறந்த குழந்தை.. உறவுக்கார வாலிபர்களின் கொடூரம்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் தாரமங்கலம் பகுதியில் அம்பேத்கார் நகர் உள்ளது. இந்த பகுதியை சார்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை அங்குள்ள தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதி செய்துள்ளனர். 

அங்கு சிறுமிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த சிறுமிக்கு கடந்த 11 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக சிறுமி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில், சிறுமியின் உறவுக்கார வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுமியை அவரது உறவுக்கார வாலிபர்கள் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், இதனாலேயே சிறுமி கர்ப்பிணியாகி குழந்தையை பெற்றெடுத்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Child Sexual abuse and delivery police investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->