ஆத்தூர்: 10 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் பலாத்காரம்.. பெண் கேட்டு தராததால் காமுகன் வெறிச்செயல்.! - Seithipunal
Seithipunal


பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பைத்தூர் பகுதியை சார்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பள்ளிக்கு சென்ற நிலையில், மீண்டும் மாணவி வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனையடுத்து, சிறுமியை தேடியலைந்த காவல் துறையினர், ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். 

விசாரணையில், சிறுமி கடம்பூர் பகுதியை சார்ந்த ராமர் என்பவருடன் பழகி வந்தது தெரியவந்த நிலையில், ராமர் சிறுமியை பெண்கேட்டு சென்றதும், பெண் வீட்டார் சார்பாக பெண் தர மறுப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, கடம்பூரில் ராமருடன் இருந்த சிறுமியை மீட்ட காவல் துறையினர், சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் காமுகன் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, தனது வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. 

மேலும், சிறுமி சகோதரத்துவ முறையில் பழகி வந்ததாகவும், அவர் பெண் கேட்டு வீட்டிற்கு வந்து பெற்றோர்களுக்கு தொல்லை கொடுத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். காமுகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Salem Attur child girl Sexual abuse and Kidnapped Police Arrest Culprit 17 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->