சகாயத்தை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..! வருத்தத்தில் கூறிய வார்த்தைகள்.!
sagayam sad about tnpsc
தூத்துக்குடி நகரில் உள்ள கின்ஸ் இலவச பயிற்சி அகாடமியின் சார்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றியடைந்த 124 மாணவ - மாணவியர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை அறிவியல் நகரத்துடைய தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
மேலும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் வீட்டில் இருந்தபடியே தயார் செய்து கொள்ளும் வகையில், www.khinsacademy.com என்ற இலவச இணைய பக்கத்தையும் துவங்கினார். இதனைத்தொடர்ந்து பேசிய சகாயம், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடந்துள்ள முறைகேடு விவகாரம் பெரும் வருத்தத்தை அளிக்கிறது.
பல இலட்சக்கணக்கான நபர்கள் கடுமையாக படித்து தேர்வெழுதி பணிக்காக காத்திருந்த நிலையில், வேலையில்லா திண்டாட்டத்தில் இவ்வாறு நடைபெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இது மாணவர்களின் கனவை பாதித்துள்ளது. போட்டித்தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படுகிறது.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்காலத்தில் இது போன்ற குற்றம் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.