செங்கல்பட்டு || வழிப்பறியை தடுக்க சென்ற காவலருக்கு கத்தி குத்து..! - Seithipunal
Seithipunal


வழிப்பறியை தடுக்க சென்ற காவலரை வெட்டி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கசாவடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அங்கிருந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பெற முயன்றுள்ளார். அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த தலைமை காவலர் அருள் அந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில் ஒருவன் தான் வைத்திருந்த கத்தியால் காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றனர்.

அவர்களை விடமால் துரத்திய தலைமை காவலர் மடக்கி பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை காவலர் அருளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Robbers attack the police


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->