மினிவேன் கவிழ்ந்து பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு..!
Relief Fund Announced By Chief minister
துறையூர் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நேற்று மினி வேன் டயர் வெடித்தது இதனால் தடுமாறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது. இதில், 8 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் கடுமையான காயத்தோடு மீட்க பட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுத்து வருகிறார்கள்.
இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இது தவிர பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்குவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
English Summary
Relief Fund Announced By Chief minister