திருமணமான இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... உறவினர் கைது...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் திருமணமான இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே பில்லாந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் 22 வயதுடைய இளம் பெண். இவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இளம்பெண் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அவரது உறவினரான மோரணம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இளம் பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை காட்டி ஆசைக்கு இணங்குமாறு அழைத்து தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் சத்தம் போடவே உன் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர். இதைப்பார்த்த சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தூசி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Relative arrested for sexually harassing a young woman in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->