தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை மையம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையை பொருத்தவரையில், புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்றும், அதிகபட்சமாக  34 டிகிரி செல்சியசும், குறைந்த வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 9 சென்டிமீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 8 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளான குளச்சல் முதல் தனுஷ்கோடி கடல் வரை கடல் மட்டம் 1.8 மீட்டர் உயரம் மூன்று மீட்டர் உயரம் வரை எழுப்பக்கூடும் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Regional Meteorological Center Announcement 26 September 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->