குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்த ரேஷன் அரிசி..!
Ration rice hoarded to buy at a low price and sell at a high price
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே கருப்பு கோவில் விலக்கு பகுதியில் ஒரு வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் சிந்துபட்டி போலீசார் அந்த வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் உசிலம்பட்டி அருகே உள்ள மாயம்பட்டியை சேர்ந்த வடிவேல் வயது 48. இவர் ரேசன் கடையில் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், போலீசார் அங்கிருந்த 2,250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் வடிவேலுவை கைது செய்து மதுரை உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
English Summary
Ration rice hoarded to buy at a low price and sell at a high price