ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை: ஆனால்... இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி 492 விசைப்படகுகளில் 3500 கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். 

நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவுக்கு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து 23 பேரை சிறைபிடித்தனர். 

மேலும் அவர்களது இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில் 23 மீனவர்களையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அதில் 20 மீனவர்களை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மீதமுள்ள 3 மீனவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rameshwaram 20 fishermen released


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->