26-ந் தேதி முழுவதும் ராமேசுவரம் கோவிலில் நடை திறப்பு..! - Seithipunal
Seithipunal


ராமேசுவரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் இந்த வருடத்திற்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் 5-ம் நாளான நேற்று காலை ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தங்க பல்லக்குகளில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 

இதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் காட்சி தந்தனர். இந்த நிலையில், திருவிழாவின் 6-ம் நாளான இன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும், 7-ம் நாளான நாளை மாலை 4 மணிக்கு தங்க பல்லக்கில் முத்தங்கி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். 

இந்த மகா சிவராத்திரியின் முக்கிய நிகழ்ச்சியாக ஒன்பதாம் நாள் விழாவும், சிவராத்திரி தினமான வருகிற 26-ந் தேதி காலை தேரோட்டமும், இரவில் வெள்ளி தேரோட்டமும் அன்றைய தினம் சிவராத்திரி என்பதால் அன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் மற்றும் இரவு முழுவதும் சாத்தப்படாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ramanathasamy temple gate open coming 26


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->