கிணற்று சேற்றில் சுவர் இடிந்து விழுந்து சிக்கிய சிறுவன்.. 8 மணிநேரத்திற்கு பின்னர் உடல் மீட்பு.!!
Ramanathapuram youngster Died Struggled Well Mud During Raining condition
கிணற்று சேற்றில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மல்லல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் கணேஷ் (வயது 13). கணேஷ் தனது நண்பர்களுடன் அங்குள்ள கண்மாய் பகுதிக்கு அருகே இருக்கும் கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கிணற்றை சுற்றியுள்ள சிமெண்ட் தரை பலவீனமாக இருந்துள்ளது. சிறுவர்கள் அனைவரும் கிணற்றில் குளிக்க சென்றிருந்த சமயத்தில், திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இதனால் உருவான பள்ளத்தில் சிறுவன் கணேஷ் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட நிலையில் சேற்றில் மாட்டியுள்ளார். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சேற்றில் சிக்கிய சிறுவனை மீட்க போராடினர்.
சுமார் ஒன்பது மணி நேரம் சிறுவனை மீட்க பல்வேறு முயற்சி எடுத்த நிலையில், 8 மணிநேரம் கழித்து அதிகாலை 2:30 மணியளவில் சிறுவனை சடலமாகவே அவர்களால் மீட்க முடிந்தது. சிறுவனின் உடலை மீட்டு காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மழைக்காலங்களில் நீர் நிலைகள், கிணறுகள் போன்றவற்றுக்கு செல்ல கூடாது என முன்னோர்கள் கூறியது இது போன்ற துயரங்கள் அரங்கேறிவிடக்கூடாது என்பதற்காக தான். சிறார்கள் மழைக்காலங்களில் நீர் நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சிறார்களின் பெற்றோர்களும் இதனை கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Ramanathapuram youngster Died Struggled Well Mud During Raining condition