40 வருடம் சொந்த காசு போட்ட எங்களுக்கு பட்டை நாமமா?... கொந்தளிக்கும் ரஜினி ரசிகர் எஸ்.ஆர் ராஜன்.!
Rajinikanth Fan SR Rajan Angry about Rajinikanth Politics No Entry Announcement
நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்புக்கு 40 வருட மக்கள் மன்ற உழைப்பாளி ஆர்.எஸ் ராஜன் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், ஆலோசனைக்கு பின்னர் தான் அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன். எனது ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து, ரஜினி ரசிகர் மன்றமாக மீண்டும் அது செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இன்றாவது தனது அரசியல் பிரவேசத்தை மீண்டும் ரஜினி அறிவிப்பார் என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சில உண்மையான ரசிகர்கள் அவரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இறுக்கமான மனதுடன் புறப்பட்டு சென்றனர். சிலர் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி ரஜினியை விமர்சிக்க தொடங்கினர்.
அந்த வகையில், கடந்த 40 வருடமாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகத்தில் இருக்கும் ஆர்.எஸ்.ராஜன் வெளியிட்டுள்ள வீடியோவில், " நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, அது ரஜினி ரசிகர் மன்றமாக செயல்படும் என அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மற்றும் ரசிகர்களை ஏமாற்றும் வேலை.
நாங்கள் கடந்த 40 வருடமாக ரஜினி ரசிகராக இருந்து அவருக்காக பல நற்பணிகள் செய்து வந்துள்ளோம். எங்களின் சொந்த செலவில் ரஜினி மக்கள் மன்ற பெயரில் மக்களுக்கு பல உதவிகள் செய்துள்ளோம். ஆனால், ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக தெரிவித்தார்.
இதனை நம்பி பல ரசிகர்கள் தங்களின் பொருட்செலவில் பல உதவிகள் செய்தார்கள். சிலர் கடன் வாங்கியும் மக்களுக்கு பல உதவிகள் செய்தார்கள். இதனால் பல இலட்சம் பணத்தை அவர்கள் இழந்தார்கள். ரஜினி அரசியல் பிரவேசம் என்ற பெயரில் சினிமா வாய்ப்புகளையும் தக்கவைத்து, அதிலும் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இலாபம் பெற்றுக்கொடுத்தார். மக்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தினார்.
தற்போதும் 4 முதல் 5 படங்கள் நடித்து அதனை வெளியிட முடிவு செய்துள்ள ரஜினி அதற்காக சில செயல்களை செய்து வருகிறார். எல்.கே.ஜியில் தொடங்கி பி.எச்.டி படிப்பை போல ரசிகர் மன்றம் மெல்ல மெல்ல வளர்ந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் எல்.கே.ஜி படிப்புக்கு செல்வது போல அவர் தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்கு உரியது " என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Rajinikanth Fan SR Rajan Angry about Rajinikanth Politics No Entry Announcement