மக்களே உஷார் - தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை.!
rain to 15 districts in tamilnadu
தமிழகத்தில் பதினைந்து மாவட்டங்களில் இரவு ஏழு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "
மதுரை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
rain to 15 districts in tamilnadu