விருதுநகர் | அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கணித ஆசிரியர் தாமோதரன் போக்சோ வழக்கில் கைது.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், புதுச்சூரங்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் ஆசிரியர் தாமோதரன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த புதுச்சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் தாமோதரன் என்பவர், பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன் பேசுவதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், இன்று காலை மாணவியின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் மீதான குற்றம் நிரபனமானதால் அவரை தற்போது தற்காலிகமாக இடைநீக்கம் செய்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

மேலும், ஆசிரியர் தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.  மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பள்ளியின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

puthusoorangudi school teacher arrested


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->