மனைவியை திட்டமிட்டு அபகரித்த காமுகன்.. தட்டிக்கேட்ட கணவனை மருத்துவமனைக்கு அனுப்பிய கொடூரம்.!!
puthukottai man murder attempt illegal affair
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியை சார்ந்தவர் பிரசாத் (வயது 25). இவரது மனைவியின் பெயர் சாந்தி (வயது 22). இவர்கள் இருவருக்கும் ஐந்து வயதுடைய மகன் இருக்கிறார்.
பிரசாத் அங்குள்ள காந்தி கிராமம் பகுதியில் உள்ள மெத்தை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், மெத்தை நிறுவனத்தின் உரிமையாளர் அவ்வப்போது பிரசாத்தின் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளான்.
இந்த சமயத்தில், பிரசாத்தின் மனைவியை கவரும் பொருட்டு பல நடவடிக்கையை மேற்கொண்டு, பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளான். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரசாத், உரிமையாளர் விஜயகுமார் மற்றும் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான காமுகன் விஜயகுமார் தனது நண்பர்கள் மகேஸ்வரன், உதயகுமார், மதன்குமார் ஆகியோருடன் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்யும் முயற்சியோடு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு போராடிய பிரசாந்த் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விஜயகுமார் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
puthukottai man murder attempt illegal affair