#BREAKING : நாளை காலை புரெவி புயல்., சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்து உள்ளார். 

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும்.

காரைக்காலுக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* நாளை நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* டிச.2ல் தென்காசி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* டிச.3ந்தேதியும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Puravi Cyclone info


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->