சிறுமியை சீரழித்து, வீடியோ எடுத்து தாயிடம் காண்பித்த கொடூரன்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி.!!
Pudukkottai Keeranur Child girl sexual abuse by relation
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் 15 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமியின் உறவுக்கார வாலிபர் முருகன் (வயது 26).
இந்த நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், முருகன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதனை விடியோவாகவும் பதிவு செய்து, பலமுறை சிறுமியை மிரட்டியே அடிபணிய வைத்துள்ளான்.
முருகனின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில், சிறுமியின் தாயிடம் விடியோவை காண்பித்து, சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கொடூர தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து காமுகன் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai Keeranur Child girl sexual abuse by relation