புதுக்கோட்டை: தாய்க்கு பாலியல் தொல்லை.. மகளுக்கு திருமணம் என போலி பத்திரிகை.. சி.பி.ஐ.எம் பிரமுகர் கைது.!
Pudukkottai Alangudi Tamilnadu CPIM Party Supporter Sexual Torture Police Arrest
வீட்டு வேலைக்கு வராத பெண்மணியை பழிவாங்க, அவரின் 17 வயது மகளுக்கு போலியான திருமண பத்திரிகை தயார் செய்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி நம்பன்பட்டி கிராமத்தை சார்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறான். இவனது வீட்டில் கடந்த ஆறு மாதம் முன்புவரை கணவரை இழந்த முத்துமணி என்ற பெண்மணி கூலிவேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், காமுகன் அவ்வப்போது பாலியல் தொல்லை அளித்து சில்மிஷம் செய்து வந்ததால், முத்துமணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தியின் இல்லத்திற்கு பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதன்பின்னர், பலமுறை சுந்தரமூர்த்தி பெண்ணுக்கு தொடர்பு கொண்டு வீட்டு வேலைக்கு வருமாறு அழைக்கவே, முத்துமணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆதிராமடைந்த காமுகன், அவரது 17 வயது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிகை அச்சடித்து பல்வேறு இடங்களில் விநியோகம் செய்துள்ளான்.
மேலும், முத்துமணியின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் பொருட்டு அவர்களின் ஆதார்கார்டு மற்றும் பாண் கார்டு தொடர்பான ஆவணத்தையும் வீடு புகுந்து எடுத்து சென்ற நிலையில், இதனை சுந்தரமூர்த்தியிடம் கேட்ட போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளான்.
இதனையடுத்து, முத்துமணி இது குறித்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காமுகன் சுந்தரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudukkottai Alangudi Tamilnadu CPIM Party Supporter Sexual Torture Police Arrest