அரசு செய்துள்ள நலத்திட்டங்களை தெருமுனைப் பிரச்சாரம் செய்யுங்கள்..தொண்டர்களுக்கு என் ஆர் காங்கிரஸ் அழைப்பு!
Publicize the welfare schemes initiated by the government My call to the volunteers of the R Congress
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களை சந்தித்து மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்ய அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, மற்றும் ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக ஆதரவுடன் களமிறங்கிய என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தனர். கட்சியின் தலைவரான என்.ரங்கசாமி மீண்டும் நான்காம் முறையாகப் புதுச்சேரியில் முதல்வராகப் பதவி ஏற்றார்.இந்தநிலையில் 2026 ஆண்டு நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற முதலமைச்சர் என்.ரங்கசாமி தீவிரம் காட்டி வருகிறார்.அந்தவகையில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் பணியை துவங்கியுள்ளார்.அதற்காக மாநில நிர்வாகிகளை நியமனம் செய்துவருகிறார்.
இந்தநிலையில் அகில இந்திய என் ஆர் காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் இளைஞர் அணி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் பி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களை சந்தித்து மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு செய்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .

English Summary
Publicize the welfare schemes initiated by the government My call to the volunteers of the R Congress