தமிழகத்தில் தொடரும் விபச்சாரம்.. கையும், களவுமாக பிடித்த போலீசார்! கைதான இளம் பெண்கள்!!
prostitution girls arrest
மதுரையில் பிரபல மசாஜ் சென்டர்கள், ஆயுர்வேத கிளினிக்கள், ஸ்பாக்கள் ஆகிய இடங்களில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட வைப்பதாக தகவல் வெளியானது. மதுரையில் உள்ள காளவாசல் பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு தாவல் வந்தது.
இந்த தகவலை அடிப்படையாகக்கொண்டு மதுரை நகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தனிக்குழு அமைத்து அந்த இடத்தில் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்த பின்னர் கைது செய்யுமாறு கூறினார். காவல் உதவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
அந்த பகுதியில் விசாரணை நடத்தியபோது வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் கட்டாயமாக ஈடுபடுத்துவதாக கூறினர். மசாஜ் சென்டற்குள் சென்று பார்த்தபோது கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த பெண்களை வைத்து விபசாரம் நடத்தப்படுவதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான கார்த்திக் முருகன், கேரளாவை சேர்ந்த ஸ்ரீரவன், காயத்ரி உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்த மசாஜ் சென்டரிலும் விபச்சாரம் நடப்பதாக தகவல்கள் கிடைத்தது. அந்த மசாஜ் சென்டரின் உரிமையாளர்களான இமானுவல், திவ்யா உட்பட 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
prostitution girls arrest