சென்னையில் அமோகமாக நடைபெற்ற விபச்சாரம்.. கட்டம் கட்டிய காவல்துறை.. சிக்கிய முக்கிய புள்ளி.!
prostitution for chennai royapettah
சென்னை ராயப்பேட்டை மீர்சாகி பேட்டை மார்க்கெட் அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்து வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசார தொழில் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்த இரண்டு வட மாநில பெண்கள் உட்பட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர் தமீம் அன்சாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
prostitution for chennai royapettah