''கசப்பான உண்மையை சொல்லப்போகிறேன்'' - பிரதமர் மோடி பேச்சு! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி கசப்பான உண்மைகளைச் சொல்லப் போகிறேன் எனவும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் கோரிக்கைகளாக இருந்தவை எல்லாம் பா.ஜ.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருவதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டி உள்ளார். 

தூத்துக்குடியில் தமிழ் தாய் வாழ்த்து உடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் ரூ. 17300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய பிரதமர் மோடி, 

பல சகாப்தங்களாக கோரிக்கையாக இருந்ததை பா.ஜ.க தலைமையில் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் வெறும் கோரிக்கையாக இருந்த பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->