பொன்முடி மீதான விசாரணை: வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதி மீறி செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 26 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 22 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், கோதகுமார் ஆகிய 4 பேர் ஆஜராகினர். ஆனால் அமைச்சர் பொன்முடி உள்பட 3 பேர் ஆஜராகவில்லை. 

அதற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi case adjourned court 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->