ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட காவலர்.. வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மது போதையில் ஆபாசமாக பேசிய காவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை பெரியமேடு குற்றப்பிரிவு காவல் ஆக பணியாற்றி வருபவர் சபரி கொண்டார். இவர் நேற்று அளவுக்கு அதிகமான மது போதையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு இருந்த பயணியிடம் அவரைப் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு அந்த பயணி டெல்லி செல்ல இருப்பதாகவும் அதற்கான டிக்கட்டையும் காண்பித்துள்ளார்.

ஆனால், இன் பிளாட்பார்ம் டிக்கெட் எங்கே எனக் கேட்டதற்கு டெல்லி செல்வதற்காக பயணச்சீட்டு வைத்துள்ளதாகவும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க தேவை இல்லை எனவும் அந்த பயணி கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சபரி குமார் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சபரி குமாரிடம் இந்த சம்பவம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு சபரி குமார் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால், அவரை சென்ட்ரல் ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த சபரி சபா அவர்களைக் கீழே தள்ளி விட்டு தகாத வார்த்தைகளை பேசியுள்ளார் . மேலும், அங்கிருந்து விரைவாக சென்று விட்டார்.

இந்த சகோதரிகள் ரயில்வே பாதுகாப்பு படையினர் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதனையடுத்து சபரி குமார் மீது ஆபாசமாகப் பேசுதல் கொலை மிரட்டல் விடுத்தல் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Policeman involved in drunken brawls


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->