குடியை விட முடியாது உயிரை விட்ட போலீஸ்..! கதறி அழும் குடும்பம்..!
police suicide in dharmapuri
தமிழகத்தின், தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பையர்நாய்க்கன்பட்டியை சேர்ந்த நீலகண்டன் என்பவர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சந்திரலேகா என்ற மனைவி மற்றும் 4 மகள்களும் இருக்கிறார்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் பணிக்கு செல்லாமல் 4 மாதமாக வீட்டிலேயே இருந்திருக்கிறார்.
இதன் காரணமாக கணவன் மனைவிக்கு நடுவே ஏற்பட்ட தகறார் ஒன்றில் சந்திரலேகா கோபித்துக் கொண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த நீலகண்டன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக, கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
police suicide in dharmapuri