சீமான் மீது கோவை காவல்துறை அதிரடி வழக்குப்பதிவு.. கொந்தளிக்கும் தம்பிகள்.!!
police register complaint about seeman
குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் போராட்டம் தீவிரமடைந்து இருந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பாலத்தில் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றுகையில், மத்திய மாநில அரசுகளை கடுமையாக சாடி பேசியிருந்தார். மேலும், மத்திய அரசின் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
இப்போராட்டத்தின் போது பேசிய சீமானின் மீது கோயம்புத்தூர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேசத்துரோகம் மற்றும் விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
police register complaint about seeman