தமிழகம் முழுவதும் தங்கும் விடுதிகளில் சோதனை - காரணம் என்ன?
police raide in lodges and hotels in tamilnadu
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கடந்த 25 நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இதனையடுத்து தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்கள் தங்கியுள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் படி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற சோதனையின்போது வெளியூரை சேர்ந்தவர்கள் விடுதிகளில் தங்கி இருந்தது, தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை வெளியேறும்படி தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, போலீசார் வெளியூர் நபர்கள் தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்தனரா? என்று கேட்டறிந்த பிறகே, அரை ஒதுக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினர். நாளை காலை தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
police raide in lodges and hotels in tamilnadu