இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து வெடித்த நாட்டு வெடிகுண்டு.. காவல்துறை விசாரணை..! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நாட்டு வெடி குண்டு தவறி விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பரணிபுத்தூர் நான்கு வழி சாலையில் மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்தது. இதனால், அங்கிருந்த டீகடையில் கண்ணாடி நொறுங்கியதோடு இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் படுகாமடைந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது, காயமடைந்தவர் ஐப்பன்தாங்கலை சேர்ந்தவர்  வினோத்குமார் என்பதும் நண்பர்களுடன் சென்ற இவர் பேப்பர் பையில் நாட்டுவெடிகுண்டுகளை எடுத்து சென்ற போது வெடித்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவதுறையினர் அவர்களுக்கு நாட்டுவெடிகுண்டு எப்படி கிடைத்தது? எதற்காக எடுத்து சென்றார்கள் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about the blast


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->