தற்கொலை செய்து கொண்ட மாணவி.. காவல்துறை தீவிர விசாரணை..!
Police Investigation about Student Committed Suicide
பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி கௌரி என்ற மனைவியும் 12 வயதில் ஜெனிஃபர் என்ற மகளும் உள்ளனர். ஜெனிஃபர் அங்கு உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 2 நாட்களாக கடும் வயிற்றுவலி காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீடு திரும்பி பார்த்தபோது அதை அறைக்கதவு திறக்கப்படவில்லை. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சிறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Police Investigation about Student Committed Suicide