எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


இளைஞரின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த படாளம் காவல் எல்லைக்குள் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோணிப்பை ஒன்று கிடந்தது. அதில் பாதி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கோணிப்பையில் 35 வயதுடைய ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலையாளிகள் யார்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about body founded in Road


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->