மர்ம முறையில் இறந்து கிடந்த வாலிபர்.! போலீசார் தீவிர விசாரணை.!
Police investigating the mysterious death of young man in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் மர்ம முறையில் வாலிபர் இறந்த கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் யூசிப்பியா நகர் பகுதியை சேர்ந்தவர் சையது முகமது கூலித்தொழிலாளி(30). இவரது மனைவி பஜிரா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இன்று காலை குடைப்பாறைப்பட்டியில், லேசான ரத்த காயங்களுடன் சையது முகமது மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சையது முகமதின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Police investigating the mysterious death of young man in Dindigul