காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்: குறைதீர் மனுக்களை பெற்று நடவடிக்கை காவல் ஆணையாளர் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 77 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் 24.06.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று (24.06.2025) வேப்பேரி, காவல் ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் விஜயேந்திர பிதாரி, துணை ஆணையாளர் ( நலன் மற்றும் எஸ்டேட்) D.N.ஹரிகிரண் பிரசாத், காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கலந்தாய்வு கூட்டத்தில் ‘‘காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில்‘‘ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், சென்னை பெருநகர காவல், சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 1 உதவி ஆணையாளர், 06 காவல் ஆய்வாளர்கள், 10 காவல் உதவி ஆய்வாளர்கள், 4 அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் 56 காவல் ஆளிநர்கள் என மொத்தம் 77 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர் மனுக்களை பெற்றுள்ளார்.

இம்முகாமில் பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்களை பெற்று, இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police Commissioner orders action after receiving grievance redressal petitions at special police grievance redressal camp


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->