திருவள்ளூர் || வரதட்சணை தரவில்லை.. மாமியார் வீட்டை கொளுத்திய மருமகன்..!
Police Arrested a man in thiruvallur
வரதட்சணை தராததால் மாமியார் வீட்டை கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மது அருந்தி விட்டு தினமும் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வாடகை ஆட்டோ வாங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவதன்று மாமியாரிடம் ஆட்டோவிற்கு முன் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் மாமியாரை கத்தியால் வெட்டிவிட்டு வீட்டை பெட்ரோ ஊற்றி கொளுத்தியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சரவணனை கைது செய்தனர்.
English Summary
Police Arrested a man in thiruvallur