பேஸ்புக் மூலம் ஒன்று கூடிய 250 பேர்.! உள்ளே புகுந்த போலீஸ்..அரங்கேறிய சம்பவம்.!
police arrest in kodaikanal
இணையதளம் மூலமாக தற்போது, நண்பர்கள் வட்டாரங்கள் உருவாகுவதும், அது பெருகி வருவதும் அவ்வப்போது நடந்து வருகின்றது. அந்த நண்பர் கூட்டங்கள் தங்களுடைய நட்பை விரிவுபடுத்திக் கொள்ள நேரில் சந்திப்பது வழக்கமான ஒன்றாகத்தான் இருந்து வருகிறது.
ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நட்பாக பழகுகிறார்கள். நேரில் சந்தித்து தங்களுடைய கருத்துகளை இணையதள நண்பர்கள் தற்போது பரிமாறி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இதுபோலவே நேற்று இரவு கொடைக்கானல் குண்டுபட்டி என்ற பகுதியில் சுமார் 250 பேர் ஒன்று சேர்ந்து மது விருந்து வைத்ததாகவும், இந்த விருந்தில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த மது விருந்தில் கலந்து கொண்ட 250 பேர் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட அந்த நபர்களிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இவர்கள் அனைவரும் எதற்காக கூறினார்கள், என்ன பேசினார்கள், இதற்கு பின்புறம் வேறு ஏதேனும் சமூக விரோத செயல்கள் இருக்குமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
English Summary
police arrest in kodaikanal