கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்.! போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நொய்யூர் பகுதியில் சேர்ந்த சியாஹி(22). இவருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருடன் சியாஹிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அடிக்கடி மாணவியும், சியாஹியும் சந்தித்து பேசி வந்தனர். மேலும் இருவரும் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மாணவி கடந்த சில நாட்களாக சியாஹியுடன் பழகுவதை குறைத்துக் கொண்டார்.

இதனால் மாணவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என்று நினைத்த சியாஹி, நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த மாணவி வாலிபருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தந்து விடும்படி கேட்டுள்ளார்.

அதற்கு சியாஹி குழித்துறை பகுதியில் உள்ள விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மாணவி அங்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வைத்து மாணவிக்கு சியாஹி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சியாஹி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான சியாஹியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are looking for the young man who sexually harassed the college girl in kanniyakumari


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->