ஈரோடு || கள்ளகாதலனின் மகள் மற்றும் மனைவி குறித்து ஆபாச பதிவு.. இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!
POCSO Case failed Against young woman in Erode
கள்ளக் காதலனின் மகள் மற்றும் மனைவியை பற்றி தவறாக சித்தரித்து வெளியிட்ட இளம்பெண் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா ரஞ்சனி. இவருக்கு கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ரமேஷூக்கு திருமணமாகி 15 வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.
இது இரு குடும்பத்தாருக்கும் தெரியவரவே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த உமா ரஞ்சனி ரமேஷ் மனைவி மற்றும் 15 வயது மகள் பற்றி ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
POCSO Case failed Against young woman in Erode