ஆண்டாள், திரௌபதி உள்ளிட்ட பல தெய்வங்கள் பிறந்த மண்.. ஆ.ராஜா பேச்சை பாருங்கள்..! மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


தாய் வயிற்றில் பிறந்த ஆ.ராஜா தாய்குலத்தை பற்றி இழிவாக பேசியுள்ளார். ஆ.ராஜா குறித்து நாம் பேசியிருந்தால் பி.சி.ஆர் பாய்ந்திருக்கும், போலி போராளிகள் போராட்டம் நடத்தியிருப்பார்கள் என்று மருத்துவர் அன்புமணி ஆதங்கமாக பேசினார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து எடப்பாடி தொகுதி ஜலகண்டாபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உரையாற்றினார். 

இந்த பிரச்சாரத்தில் பேசுகையில், " மருத்துவர் இராமதாஸின் 40 வருட தியாகம், 21 பேரின் உயிர் தியாகத்தின் முதற்கட்ட வெற்றி நமக்கு கிடைத்துள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். வன்னியர் சமூகத்தை போல பின்தங்கியுள்ள பிற சமூகத்திற்கும், அவர்களுக்கானது பெற்று தரப்படும். 

நேற்று திமுக ஆ.ராஜா எப்படி பேசியுள்ளார் என்று பாருங்கள். திமுக என்றாலே இப்படித்தான். நாம் பெண்களை தெய்வமாக வணங்குகிறோம். ஆண்டாள், திரௌபதி உள்ளிட்ட பல தெய்வங்கள் பிறந்த மண் இது. ஆனால், திமுக தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வருகிறது. ஆ.ராஜா பேசியது மிகமிக மோசமானது. தமிழக முதல்வரின் தாயை பற்றி ஆ.ராஜா பேசியுள்ளது மன்னிக்க இயலாத வார்த்தைகள். 

தாய் வயிற்றில் பிறந்த ஆ.ராஜா தாய்குலத்தை பற்றி கடுமையாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இதனைக்கண்டு ரசிக்கிறார். தாயை பற்றி அவதூறாக பேசுவதை, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், திமுக கூட்டணியினர் ரசிக்கிறார்கள். இதைவிட வெட்கக்கேடானது எதாவது உண்டா?.

உதயநிதி சமீபத்தில் பெண்ணை பற்றி அவதூறாக பேசுகிறார். லியோனி பேசுகிறான், பெண்களை பற்றி கொச்சையாக பேசுகிறான். திமுக கூட்டணி என்றாலே அப்படித்தான். அதிமுக ஆட்சியில் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு. சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வரமுடியாது. 

திமுகவை புறக்கணிக்க தமிழக பெண்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஆ.ராஜா பேசியதை எதாவது ஒரு ஊடகம், நிருபர்கள் செய்தி வெளியிட்டு கண்டித்துள்ளார்களா?. முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் போலி முற்போக்கு சிந்தனையாளர்கள் இதனை கண்டித்துள்ளார்களா?. இதுவே நாம் ஆ.ராஜா குறித்து பேசியிருந்தால், இந்த நேரத்திற்கு பி.சி.ஆர் சட்டம் பாய்ந்து, விவாதம் நடந்து, பல இடங்களில் போலிப்போராட்டம் நடந்திருக்கும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Election Campaign Speech about DMK A Raja


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->