பிளஸ் 2 மாணவி தற்கொலை - கடிதத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


பிளஸ் 2 மாணவி தற்கொலை - கடிதத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.! போலீசார் விசாரணை.!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவைச் சேர்ந்தவர் மேனகா மகள் கீர்த்தனா. இவர் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். 

பின்னர் வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து அளித்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொன்றனர். பின்னர் மாணவியின் புத்தகப் பையை சோதனையிட்டனர். 

அப்போது, அதில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "நான் இந்த முடிவு எடுக்க காரணம் என்னோட பொருளாதார பிரிவு மேடம் தான். அவங்க இன்னைக்கு என்னை எல்லார் முன்னிலையிலும் ரொம்ப...." என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

இதனை பறிமுதல் செய்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றபோது  மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் உதவி கமிஷனர் முகமது நாசர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். 

அதனைத் தொடர்ந்து மாணவி கீர்த்தனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

plus 2 student sucide in new vannarapettai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->