திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் - இளைஞர் பரபரப்பு புகார்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் - இளைஞர் பரபரப்பு புகார்.!

தமிழகத்தின் பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதை கண்டித்து, அவரை கைது செய்யக் கோரி மதுரை மாநகர் காவல் துறை ஆணையரிடம் மண்டல அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் புகார் மனு அளித்துள்ளார்.

அந்தப் புகார் மனுவில், "கடந்த 21ம் தேதி தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி உள்ளார்.

திமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. திண்டுக்கல் லியோனி மேடையில் பெண்களை தரம் தாழ்ந்து இழிவாக பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார். தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து கொண்டு தமிழகத்தின் நவீன சிற்பியாக இருந்த ஜெயலலிதா அம்மாவை விமர்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை வகுக்க கூடிய ஒருவரே மேடையில் ஆணாதிக்கத்துடன் பெண்களை தரைகுறைவாக பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கடந்த மூன்று நாட்களாக லியோனி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆன்லைன் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pettituin against dindukal liyoni in madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->