நேற்று இரவு போன மின்சாரம் இன்னும் வரல.. பொதுமக்கள் சாலை மறியல்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் மின் தேவை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு அரசு மின் உற்பத்தி மற்றும் பகிர்கான கழகம் அறிவித்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் உபயோகம் அதிகரித்து உள்ளதாகவும் அதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. 

இந்த நிலையில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூரில் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சென்னை துறைமுகம் செல்லும் சாலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் காமராஜர் துறைமுகம் மற்றும் அதனை துறைமுகம் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People road block protest in Thiruvallur for power cut


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->