கன்னியாகுமாரியில் திரளும் மக்கள்! விடுமுறை நாளான இன்று கூட்டம் அலைமோதுகிறது!!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தருவது வழக்கம்.

அவ்வகையில், ஞாயிறு விடுமுறையான இன்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் திரண்டனர்.முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் அவர்கள் குவிந்து சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர்.

மேலும், அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.முக்கிய இடமான கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டுரசித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம்,காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்றவற்றில் அதிகாலை முதலே கூட்டம் அலைமோதுகிறது.இதன் காரணமாக காவலர்கள் பாதுகாப்பிற்காக அங்கு முன்னச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People flock to Kanyakumari crowd is huge today holiday


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->