புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி மருத்துவமனையை சீல் வைத்த சுகாதாரத்துறை..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது உச்சகட்டத்தை எட்டி வருகிறது. நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழக அரசு கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த சோதனையில், அவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணசாமியின் மனைவியை மருத்துவமனையில் அனுமதி செய்த சுகாதாரத் துறையினர், கிருஷ்ணசாமியின் மருத்துவமனையை சீல் வைத்துள்ளனர். மேலும், குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PDK Party Krishnasamy Coimbatore Hospital closed by Health Dept


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->