12ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம்.! போக்சோவில் பரோட்டா மாஸ்டர் கைது.!
Parotta master arrested for impregnating 12th class girl in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விக்னேஷ் என்பவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷுக்கும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி கர்ப்பமானார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சடைந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய விக்னேஷை கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Parotta master arrested for impregnating 12th class girl in Tiruvannamalai