காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் காதலனுடன் மகள் ஓடியதால், பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் செட்டிமலன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை (49). இவருடைய மனைவி சங்கரம்மாள்(38). இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் இவர்களது மகள், வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம், இவர்களது மகள் வீட்டை விட்டு வெளியேறி காதலன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையறிந்த சின்னதுரை, மனைவியிடம் இனிமே எப்படி வெளியே தலை காட்ட முடியும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த சங்கரம்மாள், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் சங்கரம்மாளின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்ற சின்னதுரை சாயர்புரம் அருகில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து மாயங்கி கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் சின்ன துறையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சின்னதுரை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Parents commit suicide because their daughter went with her boyfriend in tirunelveli


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->