மதுரையில் அதிர்ச்சி சம்பவம்: மகனை அடித்துக்கொன்று எரித்த பெற்றோர்-சகோதரர் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் மதுபோதையில் தகராறு செய்த மகனை, பெற்றோர் மற்றும் சகோதரர் சேர்ந்து அடித்துக் கொன்று எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உவரி பகுதியை சேர்ந்தவர் சப்பானி. இவருடைய மனைவி காளியம்மா. இவர்களுக்கு சங்கன், சரவணன்(27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சப்பானியும், இளைய மகன் சரவணனும் ஆடு மேய்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சரவணன் சம்பவத்தன்று ஆடுகளை விற்று அந்த பணத்தில் மது குடித்துள்ளார். இதனால் பெற்றோர் சரவணனை கண்டித்துள்ளனர். அப்பொழுது ஆத்திரமடைந்த சரவணன், பெற்றோரை தாக்கியுள்ளார். இதையடுத்து தந்தை சப்பானி, வெளியூரில் இருந்த மூத்த மகன் சங்கனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சரவணன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை சங்கன் மற்றும் பெற்றோர் சேர்ந்து சரவணனை கண்டித்துள்ளனர். அப்பொழுது மது போதையில் இருந்த சரவணன் இவர்களிடையே தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் சங்கன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் சரவணனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் சங்கன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சரவணனின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரித்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வில்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parents brother beat son to murder and burnt in madurai


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->