கன்னியாகுமரி : மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு அணையில் மூழ்கி பெயிண்டர் உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நத்தம் கோடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் சுரேஷ். (43). இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் நண்பர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததை கொண்டாடுவதற்காக நேற்று நண்பர்களுடன் சேர்ந்து வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது நண்பர்கள் அனைவரும் மதியம் சமைத்து சாப்பிட்டுவிட்டு அணையில் குளித்துள்ளனர். அப்போது சுரேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சுரேஷை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Painter dies after drowning in Mambazhathuraiyaru dam in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->