மேலூர் அருகே பரிதாபம்.! ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை முட்டி உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (33). இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வந்தார். இந்நிலையில், திடீரென வீட்டில் கட்டி வைத்திருந்த காளை கயிற்றை அவிழ்த்துக்கொண்டு ஓடியுள்ளது. இதனால் முனுசாமி காளையை பிடிப்பதற்காக சென்றபோது, எதிர்பாராத விதமாக முனுசாமி காளை முட்டியுள்ளது. இதனால் முனுசாமி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முனுசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், முனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Owner killed in Jallikattu bull hit in melur madurai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->