பிற மதத்தினர் கோவிலுக்குள் வர தடை இல்லை.! ஆனால் ஒரு கண்டிஷன்.!! - அமைச்சர் சேகர் பாபு.!!
Other religious people can enter inside temple if accept Hindu system
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பழனியில் வைக்கப்பட்டிருந்த பேனர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "கோயில்கள் என்பது இந்துக்களின் அடையாளம். இந்துக்கள் வழிபாட்டு முறைகளை ஏற்றுக் கொண்டு வருவதென்றால் எந்த மதத்தினரும் வழிபாடு மேற்கொள்ளலாம். இந்துக்களில் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை.
மற்ற மதத்தின் அடையாளத்தோடு வருவதால் மட்டுமே பிரச்சனைகள் ஏற்படுகிறது. பழனியில் வைக்கப்பட்டு இருந்த பலகை குறித்து எனக்கு தெரியாது. திராவிட மாடலை பொருத்தவரை எம்மதமும் சம்மதம். சகோதரத்துவத்துடன் அண்ணன் தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Other religious people can enter inside temple if accept Hindu system