அதிமுக அலுவலக வழக்கு | நீதிமன்ற உத்தரவால் கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு!
OPS vs EPS AIADMK office case 142023
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த பொதுக்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் புகுந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள், அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்.
இது குறித்த வழக்கை சிபிசிஐ போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் தரப்பால் சூறையாடப்பட்ட பொருட்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை அதிமுக அலுவலகத்தில் ஒப்படைக்க கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதே சமயத்தில் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கமும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த நீதிமன்றம், அதிமுக அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமையாளரை தற்போது முடிவு செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் உயர் நீதிமன்றத்தில் உள்ள பிரதான வழக்கின் தீர்ப்புக்குப் பிறகே உரிமையாளரை முடிவு செய்ய முடியும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"பிரதான வழக்கின் தீர்ப்பு வெளியான பிறகே முடிவெடுக்கப்படும்" என்ற சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் கருத்து என்பது, ஓபிஎஸ் ஆதரவாளர்களை பெரும் மகிழ்ச்சியில் நடத்தியுள்ளது.
இது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு பெரும் பின்னடைவு என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த கருத்தால், அதிமுகவின் பிரதான வழக்கு மேலும் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.
English Summary
OPS vs EPS AIADMK office case 142023