அரசு ஊழியர்களுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்த துணை முதலமைச்சர்.!
ops new order to government staff
தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்கள் பொது மக்களுக்கு உரிய நேரத்தில் சென்ற சேரும் வகையில் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டமென துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் 27 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், அப்போது உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு பணியில் உள்ளவர்கள் பொது மக்களுக்காக தான் நாம் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு சிறப்பாக பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழகத்துக்கும், தங்களது துறைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நேர்மையாகவும் திறமையாகவும் பணிபுரியவும் வலியுறுத்தினார்.
English Summary
ops new order to government staff